யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பெரியாரை வழிபடுபவர்கள்
நாத்திகவாதிகள்

பெரியார் சொன்னதை ஏன் எதற்கு
என கேட்காமல் பின்பற்றுபவர்கள்
பகுத்தறிவாதிகள்

தன் மனைவியையும் பெண்ணையும்
தனக்கு சமமாக நடத்தாதவர்கள்
பெண்ணியவாதிகள்

சாதி பார்த்து
வரதட்சணை வாங்கி நடத்துவார்கள்
சுயமரியாதை திருமணத்தை

தன தேவைக்காக
கூன் விழும் வரை குனிவார்கள்
சுயமரியாதைவாதிகள்

பெரியார் பிறந்த பூமியில் இன்றும்
இரட்டை குவளை முறையும் ஜாதி கலவரங்களும்
நடப்பதை வேடிக்கை பார்பவர்கள்
பெரியாரிஸ்ட்கள்


0 comments: