யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

Sep 14, 2008

மரணம்

தெருமுனை வரை
சிரித்து வந்த உறவினர்

சொந்தத்தை பார்த்த உடன்
கதறி கதறி அழுததென்ன

இறந்தவரை பற்றி
புகழ்ந்து பாடி பேசியதென்ன

இறுதி ஊர்வல செலவை
சொன்னவுடன் காணமல் போனதென்ன

ஆனாலும்
இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்தது
அவர் நண்பனின் ஒரு சொட்டு கண்ணீரில்


1 comments:

ram said...

மிகவும் இருக்கமான மற்றூம் உன்மையன கருத்து.....