யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு நல்ல முயற்சியாய் இப்பொழுது நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் போட்டியாளர்களில் யார் யார் மேல் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என பட்டியலிட்டு இருக்கின்றது. மேலும் கிரிமினல் வழக்கு உள்ளவர்களை கட்சிகள் வேட்பாளர்களாய் அறிவிக்க கூடாது என ஒரு வாக்கெடுப்பு எடுக்கின்றது. கீழே உள்ள முகவரிக்கு சென்று வலதுப்புறத்தில் உங்கள் பெயரும், ஈமெயில் முகவரியையும் அளியுங்கள்.

http://www.lead.timesofindia.com/No_to_criminals.aspx


கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்கள் பட்டியல் கீழே,

http://www.lead.timesofindia.com/content/pending_cases.xls

இந்த பட்டியலில் இருந்து சில புள்ளி விபரங்கள்(கேப்டன் அளவுக்கு இல்லாட்டியும் கொஞ்சம்). கிரிமினல் வேட்பாளர்கள் கட்சி வரிசையாய்,

இந்தியா மொத்தம் - 122
=======================
பாஜக - 29
காங்கிரஸ் - 25
சமாஜ்வாடி பார்ட்டி - 11
ராஷ்ட்ரிய ஜனதாதளம் - 8
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி - 7
பகுஜன் சமாஜ்வாடி - 7

தமிழ்நாடு - 7
=============
திமுக - 4
காங்கிரஸ் - 2
கம்யூனிஸ்ட் பார்ட்டி(CPI) - 1

இந்த பட்டியலை பார்க்க நேரம் இல்லாதவர்களுக்கு தமிழ்நாட்டின் அந்த நல்ல(!) வேட்பாளர்கள்,

திரு. கிருஷ்ணசுவாமி - திமுக - ஸ்ரீபெரம்பதூர்
திரு. வேங்கடபதி - திமுக - கடலூர்
திரு. ரெகுபதி - திமுக - புதுக்கோட்டை
திரு. குப்புசாமி - திமுக - சென்னை வடக்கு
திரு. தனுஷ்கோடி ஆதித்தன் - காங்கிரஸ் - திருநெல்வேலி
திரு. இளங்கோவன் - காங்கிரஸ் - கோபிசெட்டிபாளையம்
திரு. அப்பாதுரை - கம்யூனிஸ்ட் பார்ட்டி(CPI) - தென்காசி


(ஒரு சந்தேகம் அதிமுகவுல எல்லாரும் நல்லவங்களா ??? )


ஹைதராபாத், பிப், 5: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னால் தலைவர் ராமலிங்க ராஜுவுக்கு 63 நாடுகளில் சொகுசு குடியிருப்புக்கள் இருப்பதும் ஆடம்பர வாழ்கை வாழ்ந்ததும் அம்பலமாகி உள்ளது.
கம்பெனியின் கணக்கு வழக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மோசடி குறித்த பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்யம் ராஜு சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. பேஷன் மீது அதிக ஆர்வம் காட்டியுள்ள இவர் 1000இக்கும் மேற்பட்ட சூட்களை வாங்கி குவித்துள்ளார். இதன் மதிப்பே ரூ. 5 கோடி இருக்கும். 521 ஜோடி ஷூ இக்கள், 310 பெல்ட்களை இவர் வைத்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள பல கோயில்களுக்கு அடிக்கடி சென்றதுடன் சுமார் 2 டன் தங்கத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 260 கோடி. ஒரு நவீன டெல இஸ் கோப்பை வாங்கியுள்ளார். ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இது வேறு எந்த இந்தியரின் வீட்டிலும் இருக்க வாய்ப்பே இல்லை என அமலாக பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Jan 11, 2009

ARR wins golden globe

He has made the billions proud.. Such humbleness comes only from the geniuses..


இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 300க்கும் மேற்பட்டோர், கொட்டிவாக்கத்தில் உள்ள கட்சி தலைவர் சரத்குமார் வீட்டு முன்பு நேற்று குவிந்தனர்.
'ராதிகா சரத்குமாருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும், அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்' என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்து முழக்கமிட்டனர். தென் சென்னை மாவட்ட செயலாளர் கே. ஜே. நாதன் தலைமையில் அவர்கள் வந்திருந்தனர்.

தகவல் அறிந்து சரத்குமார், ராதிகா ஆகியோர் அங்கு வந்து கூட்டதனரிடையே பேசினர். அப்போது சரத்குமார் பேசுகையில், 'குடும்ப அரசியலை விரும்பாதவன் நான். இருந்தாலும் ராதிகா பண்பான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். உங்கள் கொள்கையை ஏற்று, கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் கூடிப்பேசி ஒரு நல்ல முடிவை அறிவிக்கிறேன் . என்ன அறிவிப்பு என்பதை இம்மாதம் 30ம் தேதி திருநெல்வேலியில் நடக்கும் கட்சி பொதுகூட்டத்தில் தெரிவிப்பேன்' என்றார்.

ராதிகா பேசும்போது 'நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. இருந்தாலும் தொண்டர்கள் வற்புருத்துதளுக்கும் கட்சியின் தலைமைக்கும் கட்டுபடுவேன். நான் நடத்தும் ராடன் டிவி நிறுவனத்தில் 250 பேர் பணிபுரிகிறார்கள். திடீரென அவர்களை விட்டு விட்டு தீவிர அரசியலுக்கு வரமுடியாது' என்றார்.

நன்றி : தினகரன்


காமெடி 1: 300க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருகிறார்களாம்
காமெடி 2: குடும்ப அரசியலை விரும்பாதவன் நான். இருந்தாலும் - சரத்
நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. இருந்தாலும் - ராதிகா
இந்த இருந்தாலும் பன்ற தொல்ல தாங்க முடியலடா சாமி


காமெடி 3: "உங்கள் கொள்கையை ஏற்று, " - கட்சியின் கொள்கையே ராதிகா அரசியலுக்கு வர்றது தானா ?