யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பிற்படுத்தப்பட்டோர்
=====================
சாலை மறியல் செய்தனர்
கடைகளை சூராடினர்
பேருந்துகளை நொறுக்கினர்

தங்கள் சாதியை
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு
மாற்ற சொல்லி

குரங்குகளுக்கு அதிக சலுகை
என அறிவிப்பு வந்தால்
தங்கள் சாதியை
குரங்கு சாதியாய் அறிவிக்க சொல்லி
போராடினாலும் ஆச்சர்யம் இல்லை

மிகவும் பிற்பட்டு போனது
அவர்கள் சாதி மட்டும் அல்ல
மனித இனமும் தான்


1 comments:

Anonymous said...

huh. love this text