யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

Nov 19, 2014

தாத்தா

தாய் கொடுத்த தாய்ப்பாலு
இப்போ எனக்கு நினவில்ல
தாத்தா நீ ஊட்டுன சோறு
நெஞ்சு குழியில் நிக்குதையா

சின்ன வயசுல தாய் மடியில்
தூங்கியதா எந்த நினப்பும் இல்ல
தாத்தா உன் தோளில் நீ தட்டி
தூங்கியது மனச விட்டு நீங்கலையே

சாமி வந்து சொல்லுச்சுன்னு
மீனும் கறியும் நீ விட்ட
என் சாமி உனக்காக தானே
அதையெல்லாம் நானும் விட்டேன்

கோடி கணக்குல சொத்து
வச்சிட்டு போகவில்ல.. ஆனா
அன்பையும் ஒழுக்கத்தையும்
கத்து கொடுத்துட்டு போயிருக்க

உன் கடைசி காலத்துல 
வயசான உடம்பு தானே
வயித்தியம் போதுமுன்னு
பாவிப்பய நெனசுட்டனா

ராசா போல என வளத்தியே
உன் இறுதி ஊர்வலத்துல
உன்ன ராசப்போல் நான்
அனுப்பி வைக்கலையோ

நாங்க நல்லா இருந்தா நீ
நல்லா இருப்பனு சொல்லுவியே
நாங்க ரொம்ப நல்லா இருக்கையிலே
எங்கள விட்டு ஏன் போன

தாய விட்டு பிரிச்சா குழந்த அழுமாம்
ஆனா நான் அழமாட்டேன்
பிரிப்பது நீயா இருந்தா.. இப்போ
நீயே என்ன பிரிஞ்சு போயிட்டியே


0 comments: