யாமறிந்த மொழிகளிலே

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

பத்து மாதம் கழித்து
வெறும் கையோடு சென்றாலும்
பாசமாய் வாலாட்டும் நாய்

சிகப்புக்கல் மோதிரம் போட்டால்
சிறப்பாக செழிப்பாக வாழலாம்
என நம்பும் மனிதன்

யாருக்கு ஆறறிவு ?

நிலநடுக்கம் சுனாமி என
அனைத்தையும் முன்கூட்டியே
அறியும் பறவைகள்

கழிவறை கிழக்கு நோக்கி இருந்தால்
கல்யாணம் விரைவாய் நடக்கும்
என நம்பும் மனிதன்

யாருக்கு ஆறறிவு ?


0 comments: